தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைந்து 11 நாட்கள் ஆன நிலையில், அவரது நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட குடும்பத்தினர், கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள், நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்தவர்களுக்கு மதிய உணவு வழங்கினர். மேலும், விஜயகாந்திற்காக மொட்டை அடித்துக்கொண்ட தொண்டர்களை சந்தித்த பிரேமலாதா, அவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் ஆறுதல் தெரிவித்தார்.