ஓமலூர் அருகே உள்ள தாரமங்கலத்தில் வசந்த் அண்ட் கோவின் 135 வது கிளையை நிறுவனத்தின் பங்குதாரர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி வைத்து விற்பனையையும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்க்ளை சந்தித்த அவர், தீபாவளியை முன்னிட்டு கார், இருசக்கர வாகனம், கோல்டு காயின் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.