தமிழ்நாடு

சென்னையில் ஐடி ஊழியர் எடுத்த சோக முடிவு... பணிச்சுமையா? - தவிக்கும் 8 மாத கர்ப்பிணி மனைவி

தந்தி டிவி

சென்னையில் ஐடி ஊழியர் எடுத்த சோக முடிவு... பணிச்சுமையா? - தவிக்கும் 8 மாத கர்ப்பிணி மனைவி

சென்னை சூளைமேடு பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயதாகும் விஜய் என்பவர், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணமாகி, அவரது மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன் விஜய்யின் மனைவி, தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே, கடந்த இரு தினங்களாக விஜய், மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 100 BP மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற விஜய், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என சூளைமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN rain அடியோடு மாறும் தமிழக க்ளைமேட் - நெருக்கத்தில் அக்னி நட்சத்திரம்.. நாளை கனமழை வெளுக்குமாம்

Abortion Case |`கருக்கலைப்பு’ - அறச்சீற்றத்தோடு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த பரிந்துரை

Puducherry | புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பம்..

MK Stalin | ``மே 4 அன்று..’’ - அமைச்சர்கள், முக்கிய புள்ளிகளுக்கு CM திடீர் உத்தரவு

India Share Market News | வரலாறு காணாத வீழ்ச்சி.. ரத்த களரியான இந்திய பங்குச்சந்தை