தமிழ்நாடு

சென்னையில் ஐடி ஊழியர் எடுத்த சோக முடிவு... பணிச்சுமையா? - தவிக்கும் 8 மாத கர்ப்பிணி மனைவி

தந்தி டிவி

சென்னையில் ஐடி ஊழியர் எடுத்த சோக முடிவு... பணிச்சுமையா? - தவிக்கும் 8 மாத கர்ப்பிணி மனைவி

சென்னை சூளைமேடு பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயதாகும் விஜய் என்பவர், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணமாகி, அவரது மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன் விஜய்யின் மனைவி, தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே, கடந்த இரு தினங்களாக விஜய், மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 100 BP மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற விஜய், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என சூளைமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay Sangeetha Divorce Case | CM விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கில் முக்கிய நகர்வு

Erode | Minister Arunraj | ஈரோடு அரசு மருத்துவமனையில்... களத்தில் இறங்கிய அமைச்சர் அருண்ராஜ்

Thiruparankundram | TVK | திருப்பரங்குன்றம் விவகாரம் - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றசாட்டு

Breaking | TN Schools | Raj Mohan | ஆசிரியர் காலிப்பணியிடங்கள் | அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அப்டேட்

Singapen | Marinabeach | மெரினாவில் திடீர் பரபரப்பு - இறங்கி அதிரடி காட்டிய சிங்கப்பெண் படை.