தமிழ்நாடு

சென்னையில் ஐடி ஊழியர் எடுத்த சோக முடிவு... பணிச்சுமையா? - தவிக்கும் 8 மாத கர்ப்பிணி மனைவி

தந்தி டிவி

சென்னையில் ஐடி ஊழியர் எடுத்த சோக முடிவு... பணிச்சுமையா? - தவிக்கும் 8 மாத கர்ப்பிணி மனைவி

சென்னை சூளைமேடு பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயதாகும் விஜய் என்பவர், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணமாகி, அவரது மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன் விஜய்யின் மனைவி, தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே, கடந்த இரு தினங்களாக விஜய், மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 100 BP மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற விஜய், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என சூளைமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tasmac | DVAC Raid | டாஸ்மாக் முறைகேடு - லஞ்ச ஒழிப்பு சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

TNEB | EB Reading | மின் கட்டண உயர்வு புகார் - விசாரிக்க உத்தரவு

Minister Arunraj | DMK | "திமுக தாரைவார்த்த உரிமைகளை தவெக அரசு மீட்டுள்ளது" - அமைச்சர் அருண்ராஜ்

BREAKING || "கடுகளவும் அச்சுறுத்த முடியாது" - தமிழக அரசுக்கு திமுக கடும் கண்டனம்

Senthil Balaji | TN Politics | புது வழக்கு-நீளும் லிஸ்ட்.. செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்