தமிழ்நாடு

நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவு போதைப்பொருள்..சென்னை போலீசுக்கு ஷாக் கொடுத்த லேடி..

தந்தி டிவி

சென்னை எழும்பூரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சொகுசு காரை சோதனை செய்தனர். போலீசாரை கண்டதும் இரண்டு பேர் தப்பி ஓடிய நிலையில், காரில் இருந்து 70 லட்ச ரூபாய் மதிப்பிலான 705 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 6 லட்ச ரூபாய் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக அசாமைச் சேர்ந்த பெண் பாத்திமா பேகம், நட்சத்திர ஹோட்டல்களுக்கு காய்கறி வியாபாரம் செய்யும் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரை கைது செய்தனர். சொகுசு காரையும் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | Ramadoss | TN Election | யாருடன் கூட்டணி? | அறிவித்த ராமதாஸ் | மாறும் தமிழக தேர்தல் களம்

BREAKING || உறுதியானது பறவை காய்ச்சல் - கிண்டி சிறுவர் பூங்கா மூடுவதாக அறிவிப்பு

Breaking | Kamal Hassan | DMK Alliance | உதயசூரியனா? டார்ச் லைட்டா? | இறுதி முடிவெடுக்கும் கமல்ஹாசன்

Breaking | TN School | Summer Holidays | பள்ளிகளுக்கு கோடை விடுமுறை | எத்தனை நாள் தெரியுமா?

BREAKING || சென்னையில் ஓட்டு போடுவோர் கவனத்திற்கு - முக்கிய முடிவெடுத்த தேர்தல் ஆணையம்