தமிழ்நாடு

நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவு போதைப்பொருள்..சென்னை போலீசுக்கு ஷாக் கொடுத்த லேடி..

தந்தி டிவி

சென்னை எழும்பூரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சொகுசு காரை சோதனை செய்தனர். போலீசாரை கண்டதும் இரண்டு பேர் தப்பி ஓடிய நிலையில், காரில் இருந்து 70 லட்ச ரூபாய் மதிப்பிலான 705 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 6 லட்ச ரூபாய் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக அசாமைச் சேர்ந்த பெண் பாத்திமா பேகம், நட்சத்திர ஹோட்டல்களுக்கு காய்கறி வியாபாரம் செய்யும் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரை கைது செய்தனர். சொகுசு காரையும் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | BJP | New CM | டெல்லியில் முடிவான புதிய முதல்வர்

BREAKING | Rahul Gandhi | அதிர்ந்த நாடாளுமன்றம்... ராகுல் காந்தி பரபரப்பு கடிதம்

Piyush Goyal | ஸ்தம்பித்த நாடாளுமன்றம் | பிரஸ்மீட்டில் பியூஷ் கோயல் காட்டம்

BREAKING || "விடுதலை" - தமிழக மக்களுக்கு நிம்மதி செய்தி

BREAKING || தலை, கை, முதுகெலும்பு, கால் - தனித்தனியாக கிடந்த உடல்...பதற்றத்தில் கோத்தகிரி