தமிழ்நாடு

நெல்லை தமிழில் மழலை போட்ட வீடியோ - உடனே நேரில் வந்த ஆட்சியர்

தந்தி டிவி

பூலக்காடு பகுதியினை சேர்ந்த கூலி தொழிலாளி ரவி, காவிரி ஆற்றுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, ரவியின் இளைய மருமகனான பூபதி அவரது நண்பர்கள் மாரியப்பன், கிருஷ்ணன், விக்னேஷ் ஆகியோர் இணைந்து ரவியை கொலை செய்தது தெரியவந்தது. பூபதிக்கும் அவரது மனைவி வளர்மதிக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படும் நிலையில், மாமனார் ரவிதான் மனைவியுடன் இணைந்து வாழ தடையாக இருப்பதாக பூபதி நினைத்துள்ளார். தொடர்ந்து ரவியை ஆற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்று மது ஊற்றிக் கொடுத்து துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"