தமிழ்நாடு

பிரபல தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

தந்தி டிவி

ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில் தனியார் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த கட்டுமான நிறுவனம் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும், கர்நாடகா மற்றும் வடமாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் கட்டுமானங்களை செய்து வருகிறது. இந்நிலையில், வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில், ஈரோடு, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட 26 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் இருந்து இரண்டு கார்களில் வந்த வருமான வரித்துறையினர், ஈரோட்டில் உள்ள தலைமை கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இந்த நிறுவனத்தின் உரிமையாளர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருங்கிய உறவினர் எனக் கூறப்படும் நிலையில், வருமான வரி சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்