தமிழ்நாடு

பிரபல தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

தந்தி டிவி

ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில் தனியார் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த கட்டுமான நிறுவனம் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும், கர்நாடகா மற்றும் வடமாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் கட்டுமானங்களை செய்து வருகிறது. இந்நிலையில், வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில், ஈரோடு, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட 26 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் இருந்து இரண்டு கார்களில் வந்த வருமான வரித்துறையினர், ஈரோட்டில் உள்ள தலைமை கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இந்த நிறுவனத்தின் உரிமையாளர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருங்கிய உறவினர் எனக் கூறப்படும் நிலையில், வருமான வரி சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!