தமிழ்நாடு

போலீஸ் ரோந்து பணியால் சேலத்தில் நடந்த தரமான சம்பவம்.. பார்த்ததும் விட்டு தலைதெறிக்க ஓட்டம்

தந்தி டிவி

போலீஸ் ரோந்து பணியால் சேலத்தில் நடந்த தரமான சம்பவம்.. பார்த்ததும் விட்டு தலைதெறிக்க ஓட்டம்

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே மர்ம நபர்கள் திருடிச் சென்ற ஆட்டை போலீசார் மீட்டு விவசாயியிடம் ஒப்படைத்தனர். திருச்செங்கோடு கோழிக்கால்நத்தம் பகுதியைச் சேர்ந்த சபாபதி என்பவரின் ஆட்டை இரவில் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சபாபதி அளித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், சங்ககிரியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர்களைக் கண்டதும் ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். அந்த ஆடு, சபாபதிக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்திய போலீசார், அவரிடம் ஒப்படைத்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்