தமிழ்நாடு

எடியூரப்பா மீது பாலியல் புகார் கொடுத்த பெண் திடீர் மரணம்... பெங்களூருவில் அதிர்ச்சி

தந்தி டிவி

கடந்த பிப்ரவரி 2ம் தேதி, பெங்களுர் சதாசிவம் நகர் காவல்நிலையத்தில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது 54 வயது பெண் ஒருவர் பாலியல் புகாரளித்தார். அந்த புகாரில், தனது 17 வயது மகளுக்கு முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரை தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீத போக்சோ வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், புகாரளித்த பெண், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களுர் பன்னார்காட்டா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென உயிரிழந்த அந்தப் பெண்மணிக்கு சுவாச கோளாறு இருந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனாலும் முன்னாள் முதலமைச்சர் மீது புகாரளித்த பெண்ணின் திடீர் மரணம் சர்ச்சை கிளம்பிய நிலையில், காவல்துறை விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை