தமிழ்நாடு

எடியூரப்பா மீது பாலியல் புகார் கொடுத்த பெண் திடீர் மரணம்... பெங்களூருவில் அதிர்ச்சி

தந்தி டிவி

கடந்த பிப்ரவரி 2ம் தேதி, பெங்களுர் சதாசிவம் நகர் காவல்நிலையத்தில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது 54 வயது பெண் ஒருவர் பாலியல் புகாரளித்தார். அந்த புகாரில், தனது 17 வயது மகளுக்கு முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரை தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீத போக்சோ வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், புகாரளித்த பெண், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களுர் பன்னார்காட்டா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென உயிரிழந்த அந்தப் பெண்மணிக்கு சுவாச கோளாறு இருந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனாலும் முன்னாள் முதலமைச்சர் மீது புகாரளித்த பெண்ணின் திடீர் மரணம் சர்ச்சை கிளம்பிய நிலையில், காவல்துறை விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி