தமிழ்நாடு

பொய் தகவல் கூறி வாரிசுச் சான்று - தமிழக அரசுக்கு ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு

தந்தி டிவி

வாரிசுச் சான்றிதழ் விவகாரத்தில் மேட்டுப்பாளையம் தாசில்தார் உத்தரவை எதிர்த்து மாரண்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொய் தகவல்களைக் கூறி, வாரிசுரிமை சான்று பெற்று, சொத்துகளை பெயர் மாற்றம் செய்வதால், மற்ற வாரிசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது எனத் தெரிவித்தார். தந்தை மரணத்திற்கு பின், தான் மட்டுமே வாரிசு எனக் கூறி மாரண்ணன் விண்ணப்பித்த நிலையில், அதை நிராகரித்து தாசில்தார் உத்தரவிட்டார். பொய் தகவல்களைக் கூறியும், உண்மையை மறைத்தும், வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உண்மை தகவல்களை மறைத்து வாரிசுச் சான்று கோரி விண்ணப்பிப்பது தொடர்பான வழக்குகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இதுபோல் குற்ற வழக்கு தொடராமல் உடந்தையாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை