தமிழ்நாடு

காடையாம்பட்டி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு - அதிகாரிகள் நேரில் ஆய்வு

காடையாம்பட்டி கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து குழாயை சரி செய்தனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற பைப் லைன் பதிக்கும் பணியின்போது, பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால்,

தண்ணீர் வீணானது குறித்து தந்தி டி.வி.யில் செய்தி ஒளிபரப்பானது. இதையடுத்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து குழாயை சரி செய்தனர். இன்று அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்