தமிழ்நாடு

தஞ்சை : தென்னை மரங்கள் சாய்ந்ததால் விவசாயி தற்கொலை

கஜா புயலில் தென்னந்தோப்பு அடியோடு சாய்ந்ததால், விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

தந்தி டிவி
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன் குடிக்காடு என்ற பகுதியை சேர்ந்த விவசாயி சுந்தரராஜன். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் தென்னந்தோப்பு, கஜா புயலில் முற்றிலுமாக சேதமடைந்தது. தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்ததோடு, இளநீர் உட்பட தென்னங்குலைகளும் முற்றிலும் உருக்குலைந்தன. இதனால், கடந்த ஒரு வாரமாக கவலையில் இருந்து வந்த சுந்தரராஜன், தென்னை மரத்துக்கு வைக்கபுபடும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அங்குள்ள சுடுகாட்டில் சுந்தரராஜன் இறந்து கிடந்தார். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ