தமிழ்நாடு

ரூ. 5 லட்சம் கேட்டு பொறியியல் மாணவர் கடத்தல்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கல்லூரி மாணவன் மாயமானதும், கடத்தியுள்ளதாக தொலைபேசி தகவல் வந்ததும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கல்லூரி மாணவன் மாயமானதும், கடத்தியுள்ளதாக தொலைபேசி தகவல் வந்ததும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீதின் மகனான மும்தசர், பொறியியல் படித்து வருகிறார். தந்தை வெளிநாட்டில் உள்ள நிலையில், தாயுடன் வசித்து வந்த அவர், நண்பரின் திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், அவரது செல்போனில் இருந்து வந்த அழைப்பில் பேசிய மர்மநபர்கள், மும்தசரை கடத்தியுள்ளதாகவும்,

கோயம்புத்தூர் அழைத்துச் செல்வதாகவும், அவரை விடுவிக்க 5 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து அவரது அம்மா அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ