உலக யோகா தினத்தையொட்டி, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் வீர திருப்புகழ் என்ற 9 வயது சிறுவன், புதிய உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். கண்களை கட்டிக் கொண்டு கீபோர்டு இசை கருவி மூலம் கர்நாடக இசையை வாசித்து கடினமான ஏழு யோகாசனத்தை செய்து உலக சாதனை முயற்சியில் சிறுவன் ஈடுபட்டான்.