தமிழ்நாடு

பாதுகாப்பு வளையத்திற்குள் பெரிய கோயில் - 160 இடங்களில் கேமிரா பொருத்தி கண்காணிப்பு

வரலாற்று புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தந்தி டிவி

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் அடுத்த மாதம் 5ஆம் தேதி குடமுழுக்கு விழா பிரமாண்ட நடைபெற உள்ளது. இதை பார்க்க வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக காவல்துறை சார்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க, இரும்பினால் ஆன 13 தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 160 இடங்களில் கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. இதற்காக பெரிய கோவில் எதிரே கட்டுப்பாட்டு அறையும் உருவாக்கப்பட்டுள்ளது. பெரிய கோவில் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிப்ரவரி 4, 5 ஆகிய இரு நாட்கள் போக்குவரத்து நிறுத்தப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்