தமிழ்நாடு

பாதுகாப்பு வளையத்திற்குள் பெரிய கோயில் - 160 இடங்களில் கேமிரா பொருத்தி கண்காணிப்பு

வரலாற்று புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தந்தி டிவி

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் அடுத்த மாதம் 5ஆம் தேதி குடமுழுக்கு விழா பிரமாண்ட நடைபெற உள்ளது. இதை பார்க்க வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக காவல்துறை சார்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க, இரும்பினால் ஆன 13 தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 160 இடங்களில் கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. இதற்காக பெரிய கோவில் எதிரே கட்டுப்பாட்டு அறையும் உருவாக்கப்பட்டுள்ளது. பெரிய கோவில் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிப்ரவரி 4, 5 ஆகிய இரு நாட்கள் போக்குவரத்து நிறுத்தப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை