தமிழ்நாடு

பெரியகோவிலில் பிப்.5ஆம் தேதி கும்பாபிஷேகம் - கோபுர கலசங்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி கும்பாபிஷேம் நடைபெற உள்ள கோபுர கலசங்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி கும்பாபிஷேம் நடைபெற உள்ள கோபுர கலசங்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 1996ஆம் ஆண்டுக்கு பின்னர், 23 ஆண்டுகள் கழித்து, அடுத்த மாதம் இங்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் தொல்லியல்துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிதிலமடைந்த சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு, ரசாயன கலவை மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் கோபுர கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணியும், சந்திரகாந்த கல்லை கொண்டு சுத்தப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி