தமிழ்நாடு

பெரியகோவிலில் பிப்.5ஆம் தேதி கும்பாபிஷேகம் - கோபுர கலசங்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி கும்பாபிஷேம் நடைபெற உள்ள கோபுர கலசங்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி கும்பாபிஷேம் நடைபெற உள்ள கோபுர கலசங்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 1996ஆம் ஆண்டுக்கு பின்னர், 23 ஆண்டுகள் கழித்து, அடுத்த மாதம் இங்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் தொல்லியல்துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிதிலமடைந்த சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு, ரசாயன கலவை மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் கோபுர கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணியும், சந்திரகாந்த கல்லை கொண்டு சுத்தப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை