சனி பிரதோஷத்தை முன்னிட்டு, உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் உள்ள மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற, தஞ்சை பெரிய கோயிலில் உள்ள மகாநந்தியம் பெருமானுக்கு, புரட்டாசி மாத சனி பிரதோஷத்தையொட்டி மஞ்சள், தேன், பால், தயிர், பழவகைகள், கரும்பு சாறு, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்