தமிழ்நாடு

தாமிரபரணி புஷ்கர வழக்கு - அக்.8ம் தேதி தீர்ப்பு...

தாமிரபரணி புஷ்கர விழா தொடர்பான வழக்கின் தீர்ப்பு 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி நதியில் அக்டோபர் 12 முதல் 23ம் தேதி வரை புஷ்கரம் விழா நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் நெல்லை தைப்பூசப் படித்துறை, குறுக்குத் துறை ஆகிய இடங்களில் நீராட நெல்லை ஆட்சியர் அனுமதி மறுத்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், புலவர் மகாதேவன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி மகாதேவன் முன்வு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் மகாராஜன், 'பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதியும், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டும்' அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பை வரும் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு