தமிழ்நாடு

ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் : "வருத்தம் அளிக்கிறது" - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது வருத்தம் அளிப்பதாக உள்ளது என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது வருத்தம் அளிப்பதாக உள்ளது என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு பிறகே, அரசு ஆசிரியர்களை அச்சுறுத்தும் செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறது என தெரிவித்தார். ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை என்பதால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட 99 சதவீத வாய்ப்புகள் உள்ளதாகவும் தாஸ் கூறினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு