தமிழ்நாடு

ஜூன் 15ல் 10ம் வகுப்புத் தேர்வுகள் : அனுமதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

பத்தாம் வகுப்பு தேர்வை ஜூலை இரண்டாவது வாரத்திற்கு தள்ளிவைக்கலாமா என்பது குறித்து பிற்பகலுக்குள் தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஊரடங்கு காரணமாக ஜூன் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டன.

* இந்நிலையில், தொற்று பரவல் குறையாததால், தேர்வுகளை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்கக் கோரி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

* வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்வு நடத்துவதில் தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என கேள்வி எழுப்பியது.

* தனிமனித இடைவெளி பின்பற்றப்படும் என்றும்,
தேர்வு எழுத வரும் மாணவர்களின் பாதுகாப்பு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும்
அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

*இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததுடன், கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் தேர்வு நடத்தலாம் என்று அறிவுறுத்தினர்.

* மேலும், ஜூலை 2வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து பிற்பகல் 2.30 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு