தமிழ்நாடு

கள்ளக்காதலி வேறு ஒருவருடன் தொடர்பு : ஆத்திரமடைந்த காவலர் வெறிச்செயல்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பெண் ஒருவரை போலீஸ் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
தென்காசி மாவட்டம் தெற்கு கடையத்தை சேர்ந்த தம்பதி ஹரிராம் - முப்பிடாதி சக்தி. கடையம் காவல் நிலைய போலீஸ் தட்சிணாமூர்த்திக்கும் முப்பிடாதி சக்திக்கும், கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கணவர் ஹரிராம் மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்ர். இதனால், முப்பிடாதி சக்தி வீட்டுக்கு அடிக்கடி சென்ற காவலர் தட்சிணாமூர்த்தி, குடும்ப செலவுக்காக மாதந்தோறும் பணம் வழங்கியுள்ளார். இந்நிலையில் முப்பிடாதி சக்திக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த காவலர் தட்சிணாமூர்த்தி, தனது கள்ளக் காதலி முப்பிடாதி சக்தியை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் தட்சிணாமூர்த்தி, தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முப்பிடாதி சக்தியின் தலையில் குத்திவிட்டு தப்பி ஓடினார். பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள், முப்பிடாதி சக்தியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பிச்சென்ற காவலர் தட்சிணாமூர்த்தி கடையம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ