தமிழ்நாடு

கிராம கோவில்களின் சீரமைப்புக்கு பெரிய கோவில் நிதியை ஒதுக்கும் விவகாரம் - 2 வாரத்தில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள ஆயிரம் கிராம கோவில்களின் சீரமைப்பு பணிகளுக்காக, 20 பெரிய கோவில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாயை ஒதுக்க தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

இது தொடர்பான வழக்கு, இன்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது,பெரிய கோயில்களில் உள்ள நிதியை கிராமப்புற கோயில்களுக்கு பயன்படுத்துவதில் என்ன பிரச்சனை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதனால், கிராமப்புறங்களில் உள்ள கோயில்கள் வளர்ச்சி பெறும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

பெரிய கோவில்களில் இருந்து கிடைக்கப் பெறும் நிதியை தற்போதைக்கு செலவு செய்ய வேண்டாம் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள்,மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே