தமிழ்நாடு

ஜூன் 8, 9ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

ஜூன் 8, 9ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி கிருஷ்ணகிரியை சேர்ந்த பரமானந்தம், சக்திவேல் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். நெட் போன்ற தேர்வுகளில் நிரந்தர சான்றிதழ் வழங்கும் நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வு சான்று ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என இருப்பது சட்ட விரோதமானது என அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது லட்சக்கணக்கானோர், தேர்வு எழுத காத்திருப்பதால், தடை விதிக்க கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்