#chennai #thanthitv
சென்னை எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு ஆசிரியர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாழங்குப்பத்தைச் சேர்ந்த 26 வயதான கலைச்செல்வி, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். விடுமுறை நாளில் சக ஆசிரியர்களான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன், வேலூர் ஆரணியைச் சேர்ந்த கார்த்தி உள்ளிட்டோருடன் கடலில் குளித்தபோது, கலைச்செல்வி மற்றும் நவீன் அலையில் சிக்கினர். கலைச்செல்வியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். மாயமான நவீனை எண்ணூர் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.