Tasmac Crowd | நாளை டாஸ்மாக் இருக்காது என்றவுடன் குவிந்த மதுப்பிரியர்கள்
பரமக்குடியில் உள்ள மதுக்கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பரமக்குடியில் நாளை தியாகி இமானுவேல் சேகரனின் 69-வது குருபூஜை நடைபெற உள்ளது. இதனால், செப்டம்பர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இதனால் நேற்று இரவு முதுகுளத்தூர், கமுதி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
#paramakudi #tasmac #crowd #thanthitv