Tasmac Protest | டாஸ்மாக் முற்றுகையிட்ட கிராம மக்கள் 40 பேர் கைது
#tasmac #tasmacprotest
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருதுக்கோட்டை கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் கைது செய்தனர். 45 நாட்களுக்குள் கடையை மாற்றுவதாக அதிகாரிகள் அளித்த அவகாசம் முடிந்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்களும், பள்ளி மாணவர்களும் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் தொடர்ந்ததால், 26 பெண்கள் உள்பட 40 பேரை கைது செய்தனர்.