தமிழ்நாடு

5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடை மூடப்படும் என்ற அரசு அறிவிப்பின் நிலை என்ன? - உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் அறிவிப்பு குறித்து அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தந்தி டிவி

புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பையா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் - புகழேந்தி அமர்வு,

5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடை மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்த நிலையில், தற்போதைய நிலவரம் என்ன எனத் தெரியவில்லை? எனத் தெரிவித்துள்ளது.

மேலும், படிபடியாக கடைகள் மூடப்பட்டுள்ளதா?, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும், எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வருமானம் வந்தது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 11 க்கு ஒத்திவைத்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்