தமிழ்நாடு

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை - மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் , கையாடல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

இது தொடர்பாக மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது பானங்கள் விற்பனை செய்யும் கடை ஊழியர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இனி வரும் நாட்களில் முதுநிலை மண்டல மேலாளர்கள், வாரத்திற்கு 10 சில்லறை கடைகளை ஆய்வு செய்து, கூடுதல் விலைக்கு மது பானங்களை விற்பனை செய்யும் பணியாளர்களை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் எச்சரித்துள்ளார்.

=======

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்