தமிழ்நாடு

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை - மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் , கையாடல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

இது தொடர்பாக மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது பானங்கள் விற்பனை செய்யும் கடை ஊழியர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இனி வரும் நாட்களில் முதுநிலை மண்டல மேலாளர்கள், வாரத்திற்கு 10 சில்லறை கடைகளை ஆய்வு செய்து, கூடுதல் விலைக்கு மது பானங்களை விற்பனை செய்யும் பணியாளர்களை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் எச்சரித்துள்ளார்.

=======

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு