தமிழ்நாடு

ஊராட்சி மன்ற உறுப்பினர் கத்தியால் குத்தி கொலை - பெண் தர மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்

தஞ்சை அருகே ஊராட்சி மன்ற உறுப்பினரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள வண்ணக்குடி பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். 31 வயதான இவர், ஊராட்சி மன்ற 5வது வார்டு உறுப்பினராக இருந்தார். இவரின் உறவுக்கார பெண்ணை அதே பகுதியை சேர்ந்த டிரைவரான நவீன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து பெண் கேட்டு சென்றபோது நவீனுக்கும் கல்யாணசுந்தரத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த நவீன், தன் சகோதரர் மகேந்திரனுடன் சேர்ந்து கொண்டு கல்யாணசுந்தரத்தை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த கல்யாணசுந்தரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை செய்த நவீன் மற்றும் அவரது சகோதரர் மகேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர். ஊராட்சி மன்ற உறுப்பினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் வண்ணக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி