தமிழ்நாடு

விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக புகார்

தஞ்சையில், விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தஞ்சையில், விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில், விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை -திருச்சி சாலை குருவாடிப்பட்டி பகுதியில் ஏராளமான நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் 3 சிறுவர்களை அழைத்துச் சென்ற காவல்துறையினர், கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். திருட்டு வழக்கில் உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல் குற்றத்தை தங்களை ஒத்துக்கொள்ளுமாறு காவல்துறையினர் கட்டாயப்படுத்துவதாகவும் கோட்டாட்சியர் அலுவலத்தில் அவர்கள் புகார் அளித்தனர். போலீஸ் அழைத்து சென்று மாயமான விஜயகாந்த் என்பவரை கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் மனுவில் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனிடையே காயம் அடைந்த இரு சிறுவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Thiruparankundram Lamp Issue | திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..காலையிலேயே வெளியான அப்டேட்

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு