தமிழ்நாடு

தமிழகத்தில் களைகட்டிய மது விற்பனை - நேற்று ஒரே நாளில் ரூ.163 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை...

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 163 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையாகியுள்ளது.

தந்தி டிவி
உச்சநீதிமன்ற அனுமதியுடன் நேற்று, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. வண்ன டோக்கன்கள் வழங்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டதால் மது கிடைக்காமல் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். சென்னை காவல் எல்லை மற்றும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், சென்னை மண்டலத்தின் மற்ற டாஸ்மாக் கடைகளில் 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 44 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெர்றுள்ளது. சேலம் மண்டலத்தில் 41 கோடியே 7 லட்சம் ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 40 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 33 கோடியே 5 லட்சம் ரூபாய்க்கும் மதுப்பானம் விற்பனையாகியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்