தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ள நதிகள், ஆறுகளை இணைப்பது எப்போது?

தமிழகத்தில் நதிகள், ஆறுகளை இணைக்கும் திட்டங்களை நிறைவேற்ற எவ்வளவு நாட்கள் ஆகும்

தந்தி டிவி

கடலில் வீணாக கலக்கும் நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் போதிய தடுப்பணைகளை கட்ட உத்தரவிட வேண்டும் என தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தலைமை பொறியாளர் செல்வராஜ் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் உள்ள நதிகள், ஆறுகளை இணைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு திட்டங்கள் வகுத்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து தமிழகத்தில் நதிகள், ஆறுகள் இணைக்கும் திட்டங்களை நிறைவேற்ற எவ்வளவு நாட்கள் ஆகும் என அரசிடம் உரிய விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு அக்டோபர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ