தமிழ்நாடு

"மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்க டோக்கன் விநியோகம்"

ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான பொருட்களை வாங்க அட்டைதாரர்களின் வீட்டுக்கே வந்து டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

ஊரடங்கு உத்தரவையடுத்து மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படுகிறது. ரேசன் பொருட்கள் சமூகவிலகலை பின்பற்றி பாதுகாப்பாக சென்றடைவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவரர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும்.

அதில் அத்தியாவசியப் பொருட்களை ரேசன் கடைகளில் பெறுவதற்கான நேரம் மற்றும் நாள் குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நாளில் ரேசன்கடைகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை விலையின்றி பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு