தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அந்த மையத்தின் இயக்குநர் பாலசந்திரன், சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை இடைவெளிவிட்டு சிலமுறை மிதமான மழை பெய்யும் எனக் கூறினார்.