தமிழ்நாடு

மாவோயிஸ்ட் தாக்குதலை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை

தமிழக, கேரள வனப்பகுதியில் வேட்டை தடுப்பு காவல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு, மாவோயிஸ்ட்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அதிரடிப் படையினர் சிறப்பு பயிற்சி அளித்தனர்

தந்தி டிவி

* தமிழக, கேரள வனப்பகுதியில் வேட்டை தடுப்பு காவல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு, மாவோயிஸ்ட்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அதிரடிப் படையினர் சிறப்பு பயிற்சி அளித்தனர்.

* கேரள மாநிலம் கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்கள் இணையும் பகுதியில் தாமரைச்சேரி அருகே சுகந்தகிரி என்ற பழங்குடியின மக்கள் வசித்து வரும் கிராமம் உள்ளது.

* இந்த பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது. சிலநாட்களுக்கு முன்பு ரோந்து சென்ற வனத்துறையினரை மாவோயிஸ்ட்டுகள் சிறைபிடித்ததோடு, அவர்களிடம் இருந்த பணம், செல்போன், சார்ஜர், பவர்பேங் போன்றவற்றை பறித்துக் கொண்டு ஒருமணி நேரம் கழித்து விட்டுள்ளனர்.

* இதுகுறித்து தாமரைச்சேரி போலீசாருக்கு வனத் துறையினர் தகவல் அளித்தனர். தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் தற்போது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே வனப்பகுதியில் ரோந்து செல் கூடிய வேட்டை தடுப்பு காவலர்களுக்கு, அதிரடிப் படையினர் முலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

* இதில் கை எறிகுண்டு வீசுதல், பலவகையான துப்பாக்கிகளை கையாளும் முறை, நக்சல்கள் தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ள வேண்டிய தற்காப்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"