தமிழ்நாடு

தமிழகத்தின் ஆறு புதிய மாவட்டங்கள் - விரைவில் அ.தி.மு.க நிர்வாகிகள் நியமனம்

புதிய மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் சில மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது குறித்து அ.தி.மு.க தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

அ.தி.மு.க.வின் ஊராட்சி செயலாளர் பொறுப்புகளை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி அக்கட்சியின் தலைமை அறிவித்தது. இதையடுத்து அக்கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள, அ.தி.மு.க தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வரிசையில், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 6 புதிய மாவட்டங்கள், விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளையும் மாற்ற கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. இதேபோல், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் ஆலோசனை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. எனவே, தமிழக அரசியல் கட்சிகள், 2021 சட்டமன்ற தேர்தலை நோக்கி நடைபோடுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்