தமிழ்நாடு

நிலவிற்பனையில் ரூ.370 கோடி முறைகேடு - ஸ்டாலின்

வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலம், தனியார் அறக்கட்டளை ஒன்றுக்கு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டிருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலம், தனியார் அறக்கட்டளை ஒன்றுக்கு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டிருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலம், 33.46 கோடி ரூபாய் என்ற குறைந்த விலைக்கு, தனியார் அறக்கட்டளை ஒன்றுக்கு விற்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். அதனால் அரசுக்கு சுமார் 370 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அறக்கட்டளைக்கு என்று கூறி நிலத்தை மிகக்குறைந்த விலைக்கு வாங்கிய அறக்கட்டளை நிர்வாகம், தற்போது அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்டியுள்ளதாக கூறியுள்ள ஸ்டாலின், இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு