தமிழ்நாடு

மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணங்கள் - அவசர சட்டத்தை பிரகடனம் செய்த தமிழக ஆளுனர்

மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணங்கள் செலுத்த வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரகடனம் செய்தார்.

தந்தி டிவி

மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணங்கள் செலுத்த வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரகடனம் செய்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வழக்குகளை தாக்கல் செய்பவர்களால் நீதிமன்ற கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணம் செலுத்த வகை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கருத்துரு அனுப்பியது. அதை பரிசீலித்த அரசு, மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணம் செலுத்த வகை செய்யும் வகையில் தமிழ்நாடு நீதிமன்ற கட்டண சட்டத்தில் திருத்தம் செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்தது. இதை ஏற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவசர சட்டத்தை பிரகடனம் செய்துள்ளார். இதன் மூலம், மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணங்களை செலுத்தலாம்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை