தமிழ்நாடு

மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணங்கள் - அவசர சட்டத்தை பிரகடனம் செய்த தமிழக ஆளுனர்

மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணங்கள் செலுத்த வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரகடனம் செய்தார்.

தந்தி டிவி

மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணங்கள் செலுத்த வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரகடனம் செய்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வழக்குகளை தாக்கல் செய்பவர்களால் நீதிமன்ற கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணம் செலுத்த வகை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கருத்துரு அனுப்பியது. அதை பரிசீலித்த அரசு, மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணம் செலுத்த வகை செய்யும் வகையில் தமிழ்நாடு நீதிமன்ற கட்டண சட்டத்தில் திருத்தம் செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்தது. இதை ஏற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவசர சட்டத்தை பிரகடனம் செய்துள்ளார். இதன் மூலம், மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணங்களை செலுத்தலாம்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு