தமிழ்நாடு

ஆசிரியர் பணி நியமனத்தில் அதிரடி மாற்றம் - 2 தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்

ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதி தேர்வு, நியமனத்துக்கான போட்டி தேர்வு என இரண்டு தேர்வுகள் நடத்தப்படும் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

* தமிழகத்தில் ''டெட்'' எனப்படும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இதில் வெயிட்டேஜ் முறை விரைவில் நீக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ஏற்கனவே அறிவித்திருந்தார்.

* ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் 60 சதவீதம், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றின் மதிப்பெண் 40 சதவீதம் என கணக்கிடப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கு, பிளஸ்-2 மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி என, ''வெயிட்டேஜ்'' முறையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வந்தது.

தற்போது, இந்த வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வு தனியாகவும், நியமனத்துக்கான போட்டி தேர்வு தனியாகவும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* பொதுப்பள்ளி கல்வி வாரிய முடிவின்படி, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ், இதனை அறிவித்துள்ளார்.

* இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், போட்டித் தேர்வுக்கு செல்லலாம். போட்டித் தேர்வில் வெற்றி பெற்றால் பணி நியமனம் வழங்கப்படும். இந்த முறை, ஆந்திராவில் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்