தமிழ்நாடு

அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் ரத்தாகுமா? -ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அரசு நாளை பேச்சுவார்த்தை

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை தமிழக அரசு நாளை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது.

தந்தி டிவி

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

இந்த நிலையில் , ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை நாளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மூத்த அமைச்சர்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளிடையே நாளை தலைமைச் செயலகத்தில் நடக்கும் பேச்சுவார்த்தையின் முடிவில், வேலை நிறுத்த அறிவிப்பு ரத்தாகுமா, அல்லது திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறுமா என்பது குறித்து தெரிய வரும்.

இந்த நிலையில் முக்கிய கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு உடனடியாக அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்