தமிழ்நாடு

ஈரானில் உணவின்றி தவித்த மீனவர்கள் அரசு உதவியுடன் தாயகம் திரும்பினர்

ஈரானில் உணவின்றி தவித்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உதவியுடன் ஊர் திரும்பினர்.

தந்தி டிவி

* ஈரான் நாட்டிற்கு மீன்பிடிக்கச் சென்ற தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டனத்தை சேர்ந்த சுஜேய், சேவியர், பெல்டன், ஆரோக்கியராஜ் மற்றும் பெரியதாழையை சேர்ந்த விக்டர், பிரசாத் மற்றும் அஜில்டன் ஆகியோர் ஏஜெண்ட் மூலம் ஈரானுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

* விசைப்படகு உரிமையாளர் முகம்மது சலா என்பவரிடம் 7 பேரும் வேலை செய்த நிலையில், சம்பளப் பிரச்சனை காரணமாக பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டு 7 பேரையும் வெளியில் அனுப்பியதாக கூறப்படுகிறது. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் 2 மாதமாக இருப்பதை உறவினர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.

* இந்நிலையில் அவர்கள் உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து 7 பேரும் நேற்று ஊர் திரும்பினர். அவர்களை உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் உற்சாக வரவேற்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி