தமிழ்நாடு

"உரம் இருப்பு மற்றும் விநியோகம் குறித்த ஆய்வு கூட்டம்"

மத்திய அரசு சார்பில் 20 ஆயிரம் டன் யூரியா ஒதுக்கீடு

தந்தி டிவி
தமிழகத்தின் உரத் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு, 20 ஆயிரம் டன் யூரியா ஒதுக்கீடு செய்துள்ளதாக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறினார். சென்னை எழிலகத்தில் உரம் இருப்பு மற்றும் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், விவசாயிகளுக்கு தேவையான உரம், தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். காமராஜர் துறைமுகத்தில் இருப்பில் உள்ள 20 ஆயிரம் டன் உரத்தினை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அடுத்த வாரத்தில் 37 ஆயிரம் டன் யூரியா காரைக்கால் துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்