தமிழ்நாடு

தமிழக அரசியல் கட்சிகள் மீது இதுவரை 261 வழக்குகள் பதிவு - சத்ய பிரதா சாஹூ

தமிழக அரசியல் கட்சிகள் மீது இதுவரை 261 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* தமிழக அரசியல் கட்சிகள் மீது இதுவரை 261 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

* தமிழகத்தில் இதுவரை 132 கோடியே 91 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 65 கோடி ரூபாய் திரும்ப கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.

* அதேபோல் 286 கோடி ரூபாய் மதிப்புள்ள 998 கிலோ தங்கம் மற்றும் 642 கிலோ வெள்ளி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* தமிழக அரசியல் கட்சிகள் மீது இதுவரை 261 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளதாக கூறியுள்ள சத்ய பிரதா சாஹூ,

* பாஜக மீது 15 வழக்குகளும், காங்கிரஸ் மீது 10 வழக்குகளும், அதிமுக மீது 68 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல் திமுக மீது 46 வழக்குகளும், அமமுக 55 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

* எந்த கட்டிடத்திற்குள்ளும் நுழைய வருமானவரிதுறைக்கு மட்டும் அனுமதி உண்டு எனவும் அதற்கு பறக்கும் படைக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ள சத்ய பிரதா சாஹூ,

* வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று கூறிய அவர், வெளி நாடு வாழ் இந்தியர்கள் 924 பேர் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு