தமிழ்நாடு

தமிழக அரசியல் கட்சிகள் மீது இதுவரை 261 வழக்குகள் பதிவு - சத்ய பிரதா சாஹூ

தமிழக அரசியல் கட்சிகள் மீது இதுவரை 261 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* தமிழக அரசியல் கட்சிகள் மீது இதுவரை 261 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

* தமிழகத்தில் இதுவரை 132 கோடியே 91 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 65 கோடி ரூபாய் திரும்ப கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.

* அதேபோல் 286 கோடி ரூபாய் மதிப்புள்ள 998 கிலோ தங்கம் மற்றும் 642 கிலோ வெள்ளி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* தமிழக அரசியல் கட்சிகள் மீது இதுவரை 261 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளதாக கூறியுள்ள சத்ய பிரதா சாஹூ,

* பாஜக மீது 15 வழக்குகளும், காங்கிரஸ் மீது 10 வழக்குகளும், அதிமுக மீது 68 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல் திமுக மீது 46 வழக்குகளும், அமமுக 55 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

* எந்த கட்டிடத்திற்குள்ளும் நுழைய வருமானவரிதுறைக்கு மட்டும் அனுமதி உண்டு எனவும் அதற்கு பறக்கும் படைக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ள சத்ய பிரதா சாஹூ,

* வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று கூறிய அவர், வெளி நாடு வாழ் இந்தியர்கள் 924 பேர் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை