தமிழ்நாடு

தமிழகத்தின் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நிலவரம்

தமிழகத்தில் தற்போது பல்வேறு காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்த நிலவரத்தை தற்போது பார்க்கலாம்.

தந்தி டிவி

* தமிழகத்தில் 2018 ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை, டெங்கு காய்ச்சலுக்காக 2 ஆயிரத்து 750 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 பேர் உயிரிழந்தனர்.

* தற்போது 315 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்காக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 50 பேர் டெங்கு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.

* பன்றி காய்ச்சலுக்காக ஜனவரி 1 முதல் அக்டோபர் 1 வரை 917 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 16 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

* பன்றிக் காய்ச்சலுக்காக ஒரு நாளைக்கு சராசரியாக 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு