தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 9,118 பேருக்கு கொரோனா

கொரோனா 2வது அலையில், கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் ஒரே நாளில் 9 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 97 ஆயிரத்து 864 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 210 பேர் உயிரிழந்துள்ளா நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 548 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தவர்களில் இணை நோய் இல்லாத 44 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 22 ஆயிரத்து 720 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், ஒரு லட்சத்து 523 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு