கொரனோவை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரம் அருகே சேலையூரில் பாஜக சார்பில் மண்டல வாரியாக நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்த அவர், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு ஆராய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.