தமிழ்நாடு

"திரையரங்குகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரிகள் யார்?" தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார் என பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

திரையரங்குகளில் வார நாட்களில் 4 காட்சிகளும், விடுமுறை நாட்களில் 5 காட்சிகளும் திரையிட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த அனுமதியை மீறி விடுமுறை நாட்களில் காலை 5 மணியில் தொடங்கி, 6 காட்சிகள் வரை திரையிடுவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கமாறும் தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, 6 காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்பதற்கு ஆதாரம் என்ன எனவும், அதிகாரிகளை எதிர் மனுதாரர்களாக சேர்க்கவில்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனர். திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார் என தமிழக அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 12 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி

ECI | TN Election | Politics | "நாளை மறுநாள்.." வெளியான முக்கிய அறிவிப்பு