திரையரங்குகளில் வார நாட்களில் 4 காட்சிகளும், விடுமுறை நாட்களில் 5 காட்சிகளும் திரையிட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த அனுமதியை மீறி விடுமுறை நாட்களில் காலை 5 மணியில் தொடங்கி, 6 காட்சிகள் வரை திரையிடுவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கமாறும் தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, 6 காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்பதற்கு ஆதாரம் என்ன எனவும், அதிகாரிகளை எதிர் மனுதாரர்களாக சேர்க்கவில்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனர். திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார் என தமிழக அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 12 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.