தமிழ்நாடு

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

உயர்நீதிமன்ற உத்தரவு படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தந்தி டிவி

தமிழக அரசுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணா மற்றும் எம். சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற உத்தரவு படி, உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 1996 ம் ஆண்டு வார்டு வரையறை படி தேர்தலை அறிவிக்க எது தடுக்கிறது என வினவினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகள் விசாரணை சுழற்சி முறைப்படி தேர்தல் நடத்த அவகாசம் கோரிய தேர்தல் ஆணையத்தின் மனுவை நீதிபதி மணிக்குமார் அமர்வு விசாரிக்கும் என உத்தரவிட்டனர். பின்னர், வழக்கு விசாரணை வருகிற 23 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி