தமிழக அரசுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணா மற்றும் எம். சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற உத்தரவு படி, உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 1996 ம் ஆண்டு வார்டு வரையறை படி தேர்தலை அறிவிக்க எது தடுக்கிறது என வினவினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகள் விசாரணை சுழற்சி முறைப்படி தேர்தல் நடத்த அவகாசம் கோரிய தேர்தல் ஆணையத்தின் மனுவை நீதிபதி மணிக்குமார் அமர்வு விசாரிக்கும் என உத்தரவிட்டனர். பின்னர், வழக்கு விசாரணை வருகிற 23 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.