தமிழ்நாடு

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வரி 15 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மதுபானங்கள் விலை 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை ஏற்றப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சாதாரண வகை 180 மில்லி அளவு கொண்ட மதுபான பாட்டிலின் சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் கூடுதலாக விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நடுத்தர மற்றும் பிரீமியம் வகை மதுபாட்டில் சில்லறை விலையில் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர பிற பகுதிகளில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்