தமிழ்நாடு

பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

பதற்றம் மற்றும் பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
பதற்றம் மற்றும் பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில், ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்துதல், கூடுதல் காவலர்களை நியமித்தல், மூன்றடுக்கு பாதுகாப்பை ஏற்படுத்துதல், மொபைல் டீம் அமைத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. வாக்குப்பதிவின் போது 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள நிலையில், பதற்றமான பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் அல்லாதவர்கள், தேர்தல் பகுதிகளில் இருந்து வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு