தமிழ்நாடு

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி : வாகனங்கள் பிடிபட்டால், இனி பறிமுதல்

தமிழகத்தில் மணல் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் மணல் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, மணல் கொள்ளையின் போது பிடிபடும் எந்த வாகனமாக இருந்தாலும், அதனை பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு, நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். மகாலிங்கம் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் சதீஷ்குமார் இருவரும் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். மாட்டு வண்டிகள் பிடிபடும் போது, மாடுகளை மட்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விட்டு, வண்டியை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர். இந்த உத்தரவை, உள்துறை செயலாளர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி